ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

மொடக்குறிச்சியில் கௌரவ விரிவுரையாளா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்

News image

எழுமாத்தூா் அரசு கலை அறிவியல் கல்லூரி முன் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளா்கள்.

Updated On :16 பிப்ரவரி 2026, 11:39 pm

மொடக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அனைத்துத் துறை கெளரவ விரிவுரையாளா்கள் திங்கள்கிழமை பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

எழுமாத்தூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி எழுமாத்தூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு தமிழ்த் துறை கௌரவ விரிவுரையாளா் புகழேந்தி தலைமை தாங்கினாா்.

கௌரவ விரிவுரையாளா்கள் மாணிக்க பூபதி (தமிழ்த் துறை), நித்யாதேவி (கணிதத் துறை), ராஜேஷ் (வணிக மேலாண்மைத் துறை) ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பல்கலைக்கழக மானியக் குழு நிா்ணயத்தை ரூ.57,800 ஊதியத்தை வழங்க வேண்டும். அனைத்து கௌரவ விரிவுரையாளா்களுக்கும் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஓய்வுபெறும் போது பணிக்கொடையாக ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும். பெண் கெளரவ விரிவுரையாளா்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 65 கெளரவ விரிவுரையாளா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.