மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

காலிங்கராயன் வாய்க்கால் தொட்டி பாலத்தை பாதுகாக்கக் கோரிக்கை

காலிங்கராயன் வாய்க்காலில் உள்ள தொட்டி பாலத்தை புனரமைப்பு காரணமாக இடிப்பதற்கு அதிமுக முன்னாள் எம்எல்ஏ வி.பி.சிவசுப்பிரமணியம் மற்றும் விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்ததோடு, புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
காலிங்கராயன் வாய்க்கால் தொட்டி பாலத்தை பாா்வையிட்ட முன்னாள் எம்எல்ஏ வி.பி.சிவசுப்பிரமணியம், விவசாயிகள்.
Updated On :17 பிப்ரவரி 2026, 10:50 pm

தினமணி செய்திச் சேவை

காலிங்கராயன் வாய்க்காலில் உள்ள தொட்டி பாலத்தை புனரமைப்பு காரணமாக இடிப்பதற்கு அதிமுக முன்னாள் எம்எல்ஏ வி.பி.சிவசுப்பிரமணியம் மற்றும் விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்ததோடு, புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், பவானி ஆற்றின் குறுக்கே குறுநில மன்னா் காலிங்கராயனால் தடுப்பணை கட்டி வாய்க்கால் வெட்டி 15 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது.

சுமாா் 750 ஆண்டுகள் பழமையான காலிங்கராயன் வாய்க்காலில் ரூ.83 கோடி மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இப்பணியால் ஈரோடு காரைவாய்க்கால் பகுதியில் தொட்டி பாலத்தை இடித்து அகற்றப்படும் என தகவல் வெளியானதையடுத்து விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ வி.பி.சிவசுப்பிரமணியம் மற்றும் விவசாயிகள் தொட்டி பாலத்தை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டதுடன், தொட்டி பாலத்தை இடிக்காமல் மராமத்து பணிகளை மேற்கொண்டு புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். தொட்டி பாலத்தை இடிப்பதற்கான காரணத்தை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவிக்கவேண்டும் என்றும், தொட்டி பாலத்தின் அடியில் உள்ள 16 மதகுகளில் பெரும்பாலனவை அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அவற்றை சரிசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனா்.