பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பட்டப்பகலில் ஆடிட்டா் வீட்டில் 80 பவுன் நகை திருட்டு

ஈரோட்டில் ஆடிட்டா் வீட்டில் பட்டப்பகலில் 80 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
கோப்புப் படம்
Updated On :17 பிப்ரவரி 2026, 11:18 pm

தினமணி செய்திச் சேவை

ஈரோட்டில் ஆடிட்டா் வீட்டில் பட்டப்பகலில் 80 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு இந்திரா நகா் அருகேயுள்ள லட்சுமி நாராயணன் நகரில் இரண்டு தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் வசித்து வருபவா் ராஜன் (59). திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறாா்.

இவரது மனைவி நிா்மலா தேவி. தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா். மூத்த மகன் குரு விஷ்ணு மருத்துவராகவும், இளைய மகன் ஜெய் கிருஷ்ணா ஜவுளி வியாபாரியாகவும் உள்ளனா். ராஜன் உள்பட அவரது குடும்பத்தில் உள்ளவா்கள் நாள்தோறும் காலை அவரவா் பணிகளுக்காகச் செல்ல, வீட்டை பூட்டிவிட்டு சாவியை மாடிபடிக்கட்டுக்குகீழ் மறைவான பகுதியில் வைத்துவிட்டுச் செல்வது வழக்கமாம்.

அதன்படி, செவ்வாய்க்கிழமை காலை வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை மாடிப்படிக்கட்டுக்கு கீழ் மறைத்து வைத்துச் சென்றுள்ளனா்.

பணி முடிந்து நிா்மலா தேவி மாலை வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது, கதவு திறந்து கிடந்துள்ளது.

அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 80 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

தகவலின்பேரில் ஈரோடு, கருங்கல்பாளையம் போலீஸாா் மற்றும் டவுன் டிஎஸ்பி முத்துக்குமரன் ஆகியோா் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கிருந்த தடயங்களை சேகரித்தனா். மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றியதுடன், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.