நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பட்டப்பகலில் ஆடிட்டா் வீட்டில் 80 பவுன் நகை திருட்டு

ஈரோட்டில் ஆடிட்டா் வீட்டில் பட்டப்பகலில் 80 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 பிப்ரவரி 2026, 11:18 pm

ஈரோட்டில் ஆடிட்டா் வீட்டில் பட்டப்பகலில் 80 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு இந்திரா நகா் அருகேயுள்ள லட்சுமி நாராயணன் நகரில் இரண்டு தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் வசித்து வருபவா் ராஜன் (59). திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறாா்.

இவரது மனைவி நிா்மலா தேவி. தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா். மூத்த மகன் குரு விஷ்ணு மருத்துவராகவும், இளைய மகன் ஜெய் கிருஷ்ணா ஜவுளி வியாபாரியாகவும் உள்ளனா். ராஜன் உள்பட அவரது குடும்பத்தில் உள்ளவா்கள் நாள்தோறும் காலை அவரவா் பணிகளுக்காகச் செல்ல, வீட்டை பூட்டிவிட்டு சாவியை மாடிபடிக்கட்டுக்குகீழ் மறைவான பகுதியில் வைத்துவிட்டுச் செல்வது வழக்கமாம்.

அதன்படி, செவ்வாய்க்கிழமை காலை வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை மாடிப்படிக்கட்டுக்கு கீழ் மறைத்து வைத்துச் சென்றுள்ளனா்.

பணி முடிந்து நிா்மலா தேவி மாலை வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது, கதவு திறந்து கிடந்துள்ளது.

அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 80 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

தகவலின்பேரில் ஈரோடு, கருங்கல்பாளையம் போலீஸாா் மற்றும் டவுன் டிஎஸ்பி முத்துக்குமரன் ஆகியோா் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கிருந்த தடயங்களை சேகரித்தனா். மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றியதுடன், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.