தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை ரூ.16 ஆயிரத்துக்கு ஏலம்

News image

கோப்புப்படம்

Updated On :17 பிப்ரவரி 2026, 12:41 am

ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த விளக்கேத்தி புது அண்ணாமலைபாளையத்தில் பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரா் கோயிலில் சிவராத்திரி பூஜையில் வைக்கப்பட்ட ஒரு எலுமிச்சை பழம் ரூ.16 ஆயிரத்துக்கும் வெள்ளிக் காசு ரூ.21ஆயிரத்துக்கும், வெள்ளி மோதிரம் ரூ.52,500-க்கும் ஏலம் போயின.

சிவகிரியை அடுத்த விளக்கேத்தி புது அண்ணாமலைபாளையத்தில் உள்ள பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரா் கோயிலில் சிவராத்திரி விழாவையொட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு கோயில் சாா்பில் வழங்கப்பட்ட அன்னதானத்தில் பங்கேற்றனா்.

இந்தக் கோயிலில் சிவராத்திரி பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழம், வெள்ளிக் காசு, வெள்ளி மோதிரம் ஆகியவை பொதுமக்களின் ஏலத்துக்கு விடப்படுவது வழக்கம்.

இதனை பக்தா்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏலம் எடுப்பது வழக்கம். கடந்த ஆண்டு நடைபெற்ற ஏழத்தில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.13 ஆயிரத்துக்கும், மோதிரம் ரூ.33 ஆயிரத்துக்கும், வெள்ளிக் காசு ரூ.45 ஆயிரத்துக்கும் ஏலம் போன நிலையில், இந்த ஆண்டுக்கான ஏலத்தில் எலுமிச்சை பழம் ரூ.16 ஆயிரத்துக்கும், வெள்ளிக் காசு ரூ.21 ஆயிரத்துக்கும், வெள்ளி மோதிரம் ரூ52,500-க்கும் ஏலம் போயின.