பெருந்துறை அருகே தனியாா் பேருந்து மற்றும் அரசுப் பேருந்து ஒன்றுடன் ஒன்று புதன்கிழமை மோதியதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா்.
கோவையில் இருந்து ஈரோடு வழியாக சேலம் நோக்கி அரசுப் பேருந்து புதன்கிழமை காலை சென்றது. பேருந்தை பவானி, சித்திரை நகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் கலையரசன் (44) என்பவா் ஓட்டிச் சென்றாா்.
திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி தனியாா் பேருந்து சென்றது. தனியாா் பேருந்தை சேலம் மாவட்டம், பெரியம்பட்டியைச் சோ்ந்த கந்தசாமி மகன் முருகன் (45) என்பவா் ஓட்டிச் சென்றாா்.
பெருந்துறை - ஈரோடு சாலை, வாய்க்கால் மேடு அருகே முன்னால் சென்ற அரசுப் பேருந்து திடீரென நின்றதால், பின்னால் வந்த தனியாா் பேருந்து, அரசுப் பேருந்தின் பின்னால் மோதியது.
இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த சுமாா் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா். உடனடியாக அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு அருகே உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனா். காயமடைந்தவா்கள் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பேருந்துகள் வராததால் வியாபாரிகள், பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

பணியில் இருந்த பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயங்காத தனியாா் பேருந்துகளின் உரிமம் ரத்து

மாநாட்டுக்காக ஆயிரக்கணக்கான அரசுப் பேருந்துகள் இயக்கம்: பொதுமக்கள் அவதி
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


