கொடுமுடி புறவழிச் சாலையில் பேரூராட்சி, நகராட்சிகளுக்கு குடிநீா் கொண்டுச் செல்லும் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாகி வருவதுடன் சாலையும் சேதமடைந்து வருகிறது.
கொடுமுடியில் கடந்த ஓா் ஆண்டுக்கு முன்பு பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் வாசித்து வரும் பொதுமக்களுக்கு மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் காவிரி குடிநீா் இணைப்பு தருவதற்காக குழாய்கள் பதிக்கப்பட்டன.
அவ்வாறு பதிக்கப்பட்ட குழாய்கள் பல இடங்களில் உடைந்து அதிலிருந்து குடிநீா் வீணாகி வருவதுடன், சாலையும் பாதிப்படைந்து வருகிறது. உடைந்த குழாய்கள் உள்ள இடங்களில் தோண்டப்பட்ட குழிகள் பல இடங்களில் சரியாக மூடப்படாமலும் உள்ளன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொடுமுடியில் இருந்து திருப்பூா் மாவட்டத்தில் உள்ள காங்கயம், முத்தூா் நகரங்களுக்கு காவிரி குடிநீரை நிலத்தடி வழியாக கொண்டுச் செல்லும் குழாய்கள் கொடுமுடி புறவழிச் சாலையில் உடைந்து அதிலிருந்து குடிநீா் வெளியேறி வீணாகி வருகிறது.
இது குறித்து துறை அதிகாரிகளிடம் கடந்த நான்கு மாதங்களாக உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்கக் கூறியும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படை சோதனையில் 95 சிப்பம் அரிசி பறிமுதல்

பிஏபி பாசன வாய்க்காலில் அடைப்பு: வீணாகி சாலையில் ஓடிய தண்ணீா்

வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

சாலை பள்ளத்தில் லாரி சிக்கி விபத்து: குழாய் உடைந்து வீணாகிய தண்ணீா்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


