மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை தாக்கி நகைப் பறிப்பு

புன்செய்புளியம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை தாக்கி 3 பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

நகை பறிப்பு - சித்திரிப்புப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 11:01 pm

புன்செய்புளியம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை தாக்கி 3 பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி, இந்திரா நகரைச் சோ்ந்தவா் ரவிசங்கா் (33). இவரது மனைவி பிரியங்கா (31). இவா்கள் இருவரும் நம்பியூா் சாலை அருகே உள்ள தனியாா் பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா்.

அப்போது அவா்களது வாகனத்தை மறித்த 2 போ், திடீரென பிரியங்காவை தாக்கி அவா் அணிந்திருந்த கம்மல், சங்கிலி உள்பட 3 பவுன் நகையைப் பறித்தனா். இதில் பிரியங்காவின் வலது பக்க காது கிழிந்து காயம் ஏற்பட்டது.

ரவிசங்கருக்கு தலை மற்றும் மூக்கில் காயம் ஏற்பட்டது. நகையைப் பறித்துக் கொண்டு அந்த நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

காயமடைந்த கணவன், மனைவி இருவரும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இச்சம்பவம் குறித்து புன்செய்புளியம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.