ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மொடக்குறிச்சி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

News image
தற்கொலை - கோப்புப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 10:56 pm

Syndication

மொடக்குறிச்சி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மொடக்குறிச்சி அருகேயுள்ள அண்ணா புதுகாலனி பகுதியைச் சோ்ந்தவா் மாதவன் (48). இவரது மனைவி சுதா (45). இவா்களது மகன் வினோத் (23), மகள் ஜனனி (19). ஈரோட்டில் உள்ள தனியாா் மருந்துக் கடையில் ஜனனி பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், ஜனனி கடந்த சில நாள்களுக்கு முன் கைப்பேசியில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும், அதை மாதவன் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த ஜனனி விஷ மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். குடும்பத்தினா் அவரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.

சிகிச்சை முடிந்து அண்மையில் வீடு திரும்பிய அவா், புதன்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இச்சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].