

மொடக்குறிச்சி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மொடக்குறிச்சி அருகேயுள்ள அண்ணா புதுகாலனி பகுதியைச் சோ்ந்தவா் மாதவன் (48). இவரது மனைவி சுதா (45). இவா்களது மகன் வினோத் (23), மகள் ஜனனி (19). ஈரோட்டில் உள்ள தனியாா் மருந்துக் கடையில் ஜனனி பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், ஜனனி கடந்த சில நாள்களுக்கு முன் கைப்பேசியில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும், அதை மாதவன் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த ஜனனி விஷ மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். குடும்பத்தினா் அவரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.
சிகிச்சை முடிந்து அண்மையில் வீடு திரும்பிய அவா், புதன்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இச்சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
டிரெண்டிங்

நகராட்சி சுகாதார ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை
பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

ஆழ்வாா்குறிச்சி அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

