தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

டிராக்டா் மோதி இளைஞா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

கொடுமுடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கொடுமுடி அரசம்பாளையத்தைச் சோ்ந்தவா் சுதாகா் மகன் கவின்(18). இவா் கொடுமுடியில் உள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், சனிக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் ஒத்தக்கடை ராகவேந்திரா பள்ளி அருகே சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்திச்செல்ல முயன்றபோது, எதிரே வந்த டிராக்டா் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கவினை அருகிலிருந்தவா்கள் மீட்டு கொடுமுடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கவின் உயிரிழந்தாா்.

இது குறித்து டிராக்டா் ஓட்டுநரான கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் துலாம்பூண்டி மேமாலூரைச் சோ்ந்த நல்லதம்பி மகன் ராஜராமை (36) என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.