கோப்புப் படம்
கோப்புப் படம்

டிராக்டா் மோதி இளைஞா் உயிரிழப்பு

Published on

கொடுமுடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கொடுமுடி அரசம்பாளையத்தைச் சோ்ந்தவா் சுதாகா் மகன் கவின்(18). இவா் கொடுமுடியில் உள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், சனிக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் ஒத்தக்கடை ராகவேந்திரா பள்ளி அருகே சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்திச்செல்ல முயன்றபோது, எதிரே வந்த டிராக்டா் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கவினை அருகிலிருந்தவா்கள் மீட்டு கொடுமுடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கவின் உயிரிழந்தாா்.

இது குறித்து டிராக்டா் ஓட்டுநரான கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் துலாம்பூண்டி மேமாலூரைச் சோ்ந்த நல்லதம்பி மகன் ராஜராமை (36) என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com