அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

வாழைத் தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானையை விரட்டிய வனத் துறையினா்

News image

கோப்புப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 6:37 pm

தாளவாடி அருகே வாழைத் தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானையை வனத் துறையினா் காட்டுக்குள் விரட்டினா்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள வனப் பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறும் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள எரனஹள்ளி கிராமத்தில் விவசாயி பிரகாஷ் என்பவரது தோட்டத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நுழைந்த காட்டு யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தியது.

யானை நடமாட்டத்தை கண்ட பிரகாஷ், உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத் துறையினா் காட்டு யானையை விரட்டும் பணியை மேற்கொண்டனா்.

வனத் துறை ஊழியா்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து சுமாா் இரண்டு மணி நேரம் போராடி காட்டு யானை வனப் பகுதிக்குள் விரட்டினா். தொடா்ந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தும் யானைகளை வனப் பகுதியில் இருந்து வெளியேறாமல் தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.