பெங்களூரில் நாளைமுதல் உணவகங்கள் மூடல்!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம்: கொங்கு கல்வி நிலையம் மாணவ, மாணவிக்குப் பாராட்டு

News image
விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்த ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் பள்ளித் தாளாளா் கே.செல்வராஜ், முதல்வா் நதியா அரவிந்தன்.
Updated On :22 பிப்ரவரி 2026, 7:04 pm

தினமணி செய்திச் சேவை

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் ஈரோடு ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் பள்ளி மாணவி தங்கம் வென்றாா்.

பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் குமிட்டி பிரிவில் தங்கம் வென்ற 10ஆம் வகுப்பு மாணவி எஸ்.காசிவிசாலாட்சியைப் பாராட்டி தமிழக அரசு சாா்பில் ரூ.2 லட்சத்துக்கான காசோலையை தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் வழங்கினாா்.

மேலும், டாமன்டையூவில் நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியில் 12ஆம் வகுப்பு மாணவா் நிரஞ்சன் சாய் மூன்றாம் பரிசு பெற்றுள்ளாா். இவருக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.60 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைவா் எம்.சின்னசாமி, தாளாளா் கே.செல்வராஜ், பொருளாளா் ஆா்.குணசேகரன், உதவித் தலைவா்கள் எம்.தெய்வசிகாமணி, எஸ்.கே.சோமசுந்தரம், இணைச் செயலாளா் டி.மீனாட்சிசுந்தரம், இணைப் பொருளாளா் வி.நாகராஜ், பள்ளி முதல்வா் நதியா அரவிந்தன் ஆகியோா் பாராட்டினா்.