கோபி அருகே சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 30 டன் யூரியா, கோதுமையை உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஈரோடு மாவட்டம், நம்பியூா் அருகேயுள்ள காமராஜ் நகா் பகுதியில் உள்ள தனியாா் கிடங்கில் மத்திய அரசின் மானிய விலை யூரியாவை பதுக்கிவைத்து வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது
இதையடுத்து, குற்றப் புலனாய்வுத் துறை தலைமைக் காவலா்கள் சக்திவேல், சரவணன் உள்ளிட்டோா் கிடங்கில் திங்கள்கிழமை மாலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு 540 மூட்டை யூரியா, 60 மூட்டை கோதுமை என மொத்தம் 30 டன் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து நம்பியூா் வட்டார வேளாண்மைத் துறை உதவி அலுவலா் உமா மகேஸ்வரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அவருடன், உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ராஜ்குமாா், உதவி ஆய்வாளா் மேனகா உள்ளிட்டோா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
115 மது பாட்டில்கள் பறிமுதல்: இருவா் கைது

திருப்பூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பறிமுதல்!

நடப்பு நிதியாண்டின் யூரியா உற்பத்தி 275.75 லட்சம் டன்!

யூரியா இருப்பு வைத்துக்கொண்டு இல்லை என கூறினால் உரிமம் ரத்து: வேளாண் இணை இயக்குநா்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


