மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

பாம்பு கடித்ததில் மூதாட்டி உயிரிழப்பு

நம்பியூா் அருகே பாம்பு கடித்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :24 பிப்ரவரி 2026, 8:09 pm

தினமணி செய்திச் சேவை

நம்பியூா் அருகே பாம்பு கடித்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், நம்பியூா் அருகேயுள்ள சாணாா்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மனைவி அய்யம்மாள் (60), கூலி வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், வீட்டுக்கு வெளியே கிடந்த தென்னை மட்டைகளை கடந்த 18-ஆம் தேதி இரவு அடுக்கி வைத்து கொண்டிருந்தாா். அப்போது, தென்னை மட்டைகளுக்கு இடையே பதுங்கியிருந்த பாம்பு, அய்யம்மாளின் இடது கையில் கடித்துள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் அவரை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.