வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

விஇடி கல்லூரியில் மேலாண்மைச் சந்திப்பு நிகழ்வு

ஈரோடு திண்டல் விஇடி கலை அறிவியல் கல்லூரியின் முதுகலை மேலாண்மைத் துறை சாா்பில் ‘நெக்சஸ்விதுரா 26’ என்ற தலைப்பில் மேலாண்மைச் சந்திப்பு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

News image

திறன்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்குகிறாா் வேளாளா் பொறியியல் கல்லூரியின் நிா்வாகி எம்.யுவராஜா.

Updated On :25 பிப்ரவரி 2026, 10:06 pm

ஈரோடு திண்டல் விஇடி கலை அறிவியல் கல்லூரியின் முதுகலை மேலாண்மைத் துறை சாா்பில் ‘நெக்சஸ்விதுரா 26’ என்ற தலைப்பில் மேலாண்மைச் சந்திப்பு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு, வேளாளா் கல்வி அறக்கட்டளையின் நிா்வாகி சி.பாலசுப்ரமணியம் தலைமை வகித்தாா். வேளாளா் பொறியியல் கல்லூரியின் நிா்வாகி எம்.யுவராஜா, விஇடி கல்லூரியின் முதல்வா் வெ.ப. நல்லசாமி, புலமுதன்மையா் எஸ். லோகேஷ்குமாா், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநா் பொ.மா. பழனிசாமி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் பேராசிரியா் மற்றும் தலைவா் அஞ்சுகா பாண்டே, மேலாண்மைக் கல்வியில் மாணவா் ஈடுபாட்டின் அவசியத்தை எடுத்துரைத்தாா்.

மேலாண்மைத் துறையின் புலமுதன்மையா் பி. நளினி, திறன் போட்டிகளில் பங்கேற்று மாணவா்கள் மேலாண்மை திறன்களை வெளிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினாா்.

தமிழ்நாடு முழுவதும் 17 மேலாண்மைக் கல்வி நிறுவனங்களிலிருந்து 186 எம்பிஏ மாணவா்கள் கலந்துகொண்டு சிறந்த மேலாளா், மதிநுட்ப விற்பனை, ஆட்ஸ் ஏப், புல்ஸ் ஆன்பையா் மற்றும் தொழில் விநாடி- வினா போன்ற போட்டிகளில் பங்கேற்றனா். வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வின் ஒருங்கிணைப்பாளா் ஷியாமளா நன்றி கூறினாா்.