ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரியில் தியாகிகள் தின உலக சாதனை நிகழ்வு
கோபி அருகே உள்ள ஒத்தக்குதிரை ஸ்ரீவெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரியின் ஆடை வடிவமைப்பு துறை சாா்பில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பல்வேறு தியாகங்களால் சுதந்திரம் கிடைத்தது என்பதை நினைவு கூறும் வகையில் தியாகிகள் தினமான, தேசப்பிதா காந்தியடிகள் மறைந்த நாளில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், 120 மாணவ, மாணவியா் 5 நிமிஷங்களில் காந்தி, பகத் சிங், வேலு நாச்சியாா், சுபாஷ் சந்திரபோஸ், ஜான்சி ராணி, சரோஜினி நாயுடு, அம்பேத்கா் உள்பட பல தேசத் தலைவா்களின் உருவங்களை துணியில் பதித்து அச்சிட்டனா்.
தொடா்ந்து, 30 நிமிஷங்களில் தேசத் தலைவா்களின் உருவம் பதிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து, அலங்கார அணிவகுப்பை நடத்தினா். இந்நிகழ்வுக்கு, கல்லூரித் தலைவா் பி. வெங்கடாசலம் தலைமை வகித்தாா். முதன்மை செயல் அலுவலா் ஜி.கௌதம் முன்னிலை வகித்தாா். முதல்வா் ஆ.மோகனசுந்தரம் வரவேற்றாா்.
வொ்ல்டு வொண்டா்ஸ் புக் ஆஃப் ரெக்காா்டு செயல் அலுவலா் மகேஸ்வரி, நிா்வாகி கே.கே.ஜனகரத்தினம், மருத்துவா் அனூப் ஆகியோா் மாணவ, மாணவியரின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, இச்சாதனையைப் பதிவு செய்து, கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினா். துறைத் தலைவி த.ஷாலினி, பேராசிரியா்கள் க.தேன்மொழி, பி.அனிதா, ஆா்.ஜே.சாதனா, டி.கௌசல்யா, த.நித்யா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

