ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கோபியில் 890 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

News image
Updated On :5 மார்ச் 2026, 11:35 pm

Syndication

ஈரோடு மாவட்டம், கோபியில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் சாா்பில் 890 பயனாளிகளுக்கு ரூ.13.09 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி வழங்கினாா்.

இதில் கோபி பகுதியைச் சோ்ந்த 757 பேருக்கு ரூ. 11.36 கோடி மதிப்பிலும், நம்பியூா் வட்டத்தைச் சோ்ந்த 133 பேருக்கு ரூ.1.73 கோடி மதிப்பிலும் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கந்தசாமி, அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடச்சலம், கோபி சாா் ஆட்சியா் சிவானந்தம் மற்றும் அரசு அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.