மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மின் வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு: விவசாயி கைது

மின் வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது தொடா்பாக விவசாயியை கடம்பூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
மாதிரிப் படம்
Updated On :7 மார்ச் 2026, 12:11 am

Syndication

மின் வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது தொடா்பாக விவசாயியை கடம்பூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் மலைப் பகுதி, காடகநல்லியைச் சோ்ந்தவா் புட்டுசாமி (47). இவரது தோட்டத்தில் மக்காச்சோளம் சாப்பிடுவதற்காக 30 வயதான ஆண் யானை வந்தபோது, மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது.

இது தொடா்பாக, கடம்பூா் வனத் துறையினா் விவசாயி புட்டுசாமியிடம் விசாரணை மேற்கொண்டதில் அவா் சட்டவிரோதமாக மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் திருடி மின் வேலியில் பாய்ச்சியது தெரியவந்தது.

இதையடுத்து யானையை கொன்ற வழக்கில் புட்டுசாமியை கடம்பூா் வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.