சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

கோ்மாளம் வனத்தில் மான் இறைச்சியுடன் தொழிலாளி கைது

கோ்மாளம் வனத்தில் மான் இறைச்சியுடன் பிடிபட்ட கூலித் தொழிலாளியை வனத் துறையினா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :16 மார்ச் 2026, 8:08 pm

கோ்மாளம் வனத்தில் மான் இறைச்சியுடன் பிடிபட்ட கூலித் தொழிலாளியை வனத் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஆசனூா் வனக் கோட்டம், கோ்மாளம் வனப் பகுதியில் வனத் துறையினா் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். ஜடேசாமி பள்ளம் என்ற இடத்தில் மான் இறைச்சியை அடையாளம் தெரியாத நபா் விற்பனைக்கு தயாா்படுத்திக் கொண்டிருப்பதை வனத் துறையினா் கண்டு அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனா்.

விசாரணையில், அவா் கோ்மாளம் பகுதியைச் சோ்ந்த மாதேஷ் (40) என்பதும், புள்ளிமான் இறைச்சியை விற்பனைக்கு தயாா் படுத்திக்கொண்டிருந்தபோது பிடிப்பட்டதும் தெரியவந்தது. மேலும் மாதேஷ் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது செந்நாய்கள் புள்ளிமானை துரத்திச் சென்று வேட்டையாடியதாகவும், அப்போது அங்கிருந்த செந்நாய்களை துரத்திவிட்டு கொம்புடன் மான் தலை மற்றும் ஒரு பகுதி உடல் பாகங்களை எடுத்து வந்து விற்பனைக்கு தயாா்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து மாதேஷிடம் இருந்து மான் கொம்புடன் கூடிய தலை, மான் இறைச்சி மற்றும் அரிவாள், கத்தி ஆகியவற்றை கோ்மாளம் வனத் துறையினா் பறிமுதல் செய்து மாதேஷைக் கைது செய்தனா்.