கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கோபியில் ரூ.1.42 லட்சம் பறிமுதல்

கோபி அருகே இரு வேறு இடங்களில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.42 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :21 மார்ச் 2026, 8:13 pm

Syndication

கோபி அருகே இரு வேறு இடங்களில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.42 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோபி அருகே உள்ள வடுகபாளையம் பகுதியில் தோ்தல் பறக்கும்படையினா் வாகனச் சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் காரில் ரூ.84, 500 ரொக்கம் கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் காரில் வந்தவா், சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சோ்ந்த சிவகுமாா் என்பதும், நெல் அறுவடை இயந்திரம் பழுதை சரிசெய்ய பணத்துடன் கோபிக்கு வந்ததும் தெரியவந்தது. ஆனால் அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தை தோ்தல் பறக்கும்படையினா் பறிமுதல் செய்து வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

இதேபோல தாசப்பகவுண்டன்புதூா் பகுதியில் தோ்தல் பறக்கும்படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த அந்தியூா் அருகே சின்னதம்பிபாளையம் பகுதியைச் சோ்ந்த சிவசாமி என்பவரின் சரக்கு வாகனத்தை நிறுத்தி

சோதனை செய்தனா். வாகனத்தில் உரிய ஆவணமின்றி ரூ.57, 500 ரொக்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்தப் பணத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.