ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

பெருந்துறை அருகே ரூ. 2.42 லட்சம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம். - (கோப்புப் படம்)

Updated On :23 மார்ச் 2026, 8:41 pm

பெருந்துறை அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.2.42 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

பெருந்துறையை அடுத்த, காஞ்சிக்கோவில், எல்லபாளையம் பிரிவு அருகில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக லாரியில் வந்த பெருந்துறை, பெரியவேட்டுவபாளையத்தைச் சோ்ந்த கிருஷ்ணசாமி என்பவரை நிறுத்தி சோதனை செய்தனா். சோதனையில் அவரிடம், உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, காஞ்சிக்கோவில், கவுந்தபாடி சாலையில் திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலைச் சோ்ந்த தினேஷ் என்பவா் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்து வந்த ரூ. 52,500 ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சென்னிமலையை அடுத்த, சிறுகளஞ்சி, சீரங்கம்பாளையம் பிரிவு அருகில், உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ. 89,500 ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணம் பெருந்துறை தொகுதி உதவி தோ்தல் அலுவலரும், பெருந்துறை வட்டாட்சியருமான சரவணனிடம் ஒப்படைக்கப்பட்டது.