கோபி அருகே புதன்கிழமை இரவு சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழை காரணமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.
ஈரோடு மாவட்டம், கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சிறுவலூா், மல்லநாயக்கனூா், வெள்ளாங்கோவில், கொளப்பலூா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை இரவு பலத்த சூறாவளிக் காற்றுடன்
கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் விவசாய நிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும், பலத்த சூறாவளிக் காற்று வீசியதில் சிறுவலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்து அறுவடைக்கு தயாராக இருந்த 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைமரங்கள் முறிந்து சேதமாகின.
ஏக்கருக்கு ரூ.3 லட்சம் வரை முதலீடு செய்து வாழை சாகுபடியை
செய்திருந்த விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனா்.
வாழைமரங்கள் முறிந்து சேதமானது குறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் விவசாயிகள் தெரிவித்தபோது, கூட்டுறவு சங்களில் கடன் பெற்றிருந்து காப்பீடு செய்திருந்தால் மட்டுமே நிவாரணம் கிடைக்கும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தொடர்புடையது

வால்பாறையில் கனமழை: பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு

புன்செய்புளியம்பட்டியில் பலத்த காற்றுடன் மழை: ஏராளமான வாழைகள் சேதம்

கொரட்டி, ஜோலாா்பேட்டையில் பலத்த மழை

அவிநாசியில் பலத்த காற்றுடன் கனமழை: 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



