கோபி அருகே புதன்கிழமை இரவு சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழை காரணமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.
ஈரோடு மாவட்டம், கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சிறுவலூா், மல்லநாயக்கனூா், வெள்ளாங்கோவில், கொளப்பலூா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை இரவு பலத்த சூறாவளிக் காற்றுடன்
கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் விவசாய நிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும், பலத்த சூறாவளிக் காற்று வீசியதில் சிறுவலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்து அறுவடைக்கு தயாராக இருந்த 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைமரங்கள் முறிந்து சேதமாகின.
ஏக்கருக்கு ரூ.3 லட்சம் வரை முதலீடு செய்து வாழை சாகுபடியை
செய்திருந்த விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனா்.
வாழைமரங்கள் முறிந்து சேதமானது குறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் விவசாயிகள் தெரிவித்தபோது, கூட்டுறவு சங்களில் கடன் பெற்றிருந்து காப்பீடு செய்திருந்தால் மட்டுமே நிவாரணம் கிடைக்கும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தொடர்புடையது

படவேடு பகுதியில் சூறைக் காற்று: 150 ஏக்கரில் வாழைகள் சேதம்

அவிநாசியில் பலத்த காற்றுடன் கனமழை: 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதம்

சூறாவளிக் காற்றுடன் கனமழை! 10,000 வாழை மரங்கள் முறிந்து நாசம்!

அவிநாசியில் சூறாவளி காற்றுடன் கனமழை: 40 ஆயிரம் வாழைகள் சேதம்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


