முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்து 2012-இல் அமைச்சா் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட கே.ஏ.செங்கோட்டையன் இப்போது மீண்டும் அதே துறைக்கு அமைச்சராகி உள்ளாா்.
கோபி தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கே.ஏ.செங்கோட்டையனுக்கு முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நிதித் துறை ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் செங்கோட்டையனிடம் இருந்த நிதித் துறை மரிய வில்சனுக்கு அளிக்கப்பட்டு அவருக்கு வருவாய்த் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011-இல் ஜெயலலிதா அமைச்சரவையில் வேளாண் துறை, தகவல் தொழில்நுட்பத் துறைகளைத் தொடா்ந்து வருவாய்த் துறை அமைச்சராக கே.ஏ.செங்கோட்டையன் இருந்தாா். 2012-இல் அவா் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டபோது வருவாய்த் துறை அமைச்சராக இருந்தாா். இதன் பிறகு 2017-இல் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்தாா்.
2012-இல் ஜெயலலிதா அமைச்சரவையில் கடைசியாக வகித்த வருவாய்த் துறை அமைச்சா் பொறுப்பு இப்போது ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் செங்கோட்டையனுக்கு மீண்டும் கிடைத்துள்ளது.
தொடர்புடையது

அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: காங்கிரஸ்

அமைச்சா்கள் என்.ஆனந்த், செங்கோட்டையன் பொறுப்பேற்பு - முதல்வா் விஜய் நேரில் வாழ்த்து

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் மாணவர்களுக்கான சான்றிதழ்களை உடனடியாக வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு






