விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில்  உறுப்பினராக வலியுறுத்தல்

கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்களும் நலவாரியத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என   ஏஐடியூசி வலியுறுத்தி உள்ளது.

Updated On :23 ஜூலை 2018, 7:50 am IST

கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்களும் நலவாரியத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என   ஏஐடியூசி வலியுறுத்தி உள்ளது.
குந்தா தாலுகா ஏஐடியூசி கட்டிடத் தொழிலாளர்கள் சங்கக் கூட்டம் மஞ்சூரில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஹரி தலைமை வகித்தார். 
இதில்,  தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்,  உடல் உழைப்பு தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு நலவாரியம் உள்பட தொழிலாளர்களின் நலனுக்காக  அரசால் பல்வேறு நலவாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நலவாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்துள்ள தொழிலாளிக்கு பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. 
எனவே, கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்களும் நலவாரியத்தில் பதிவு செய்திருப்பது அவசியமாகும். இதுவரை நலவாரியத்தில் பதிவு செய்யாத தொழிலாளர்கள் உடனடியாக பதிவுசெய்ய வேண்டும்.  சங்கத்தின் சார்பில் கட்டுமானத் தொழிலாளர் சந்திப்பு இயக்கம் ஜூலை 30 ஆம் தேதி வரை நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.