தமிழகம் முழுவதும் உள்ள கோயில் மற்றும் திருமடங்களை சேர்ந்த யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி பிப்ரவரி மாதம் 1ம் தேதி வரை தொடர்ந்து 48 நாட்கள் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க முதல் கட்டமாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் (ஆண்டாள்) கோயில் யானை ஜெயமால்யதா மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் பகுதியில் சனிக்கிழமை மதியம் 1.25 மணிக்கு வந்தடைந்தது.
மீதமுள்ள கோயில் யானைகள் ஞாயிற்றுக்கிழமை காலைக்குள் வந்தடையும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.