நீலகிரி தேர்தல் அலுவலர்களுடன் பொது பார்வையாளர் ஆலோசனை
By DIN | Published On : 30th March 2019 07:19 AM | Last Updated : 30th March 2019 07:19 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் உசன் லால், தேர்தல் செலவினப் பார்வையாளர் ருக்மணி அட்ரி ஆகியோர் உதகையில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட உதகை, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பறக்கும் படை குழுவினர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...