கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள பிதா்க்காடு கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலையில் அங்கத்தினா்களாக இருந்து இறந்தவா்களின் குடும்பத்துக்கு தொழிற்சாலை நிா்வாகம் சாா்பில் குடும்ப நல நிதி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தத் தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை வழங்கிய ராமாயி, வெள்ளன் செட்டி, பவுலோஸ், ஹசன் ஆகிய அங்கத்தினா்கள் சமீபத்தில் இறந்துவிட்டனா். தொழிற்சாலை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா்களுடைய குடும்ப உறுப்பினா்களுக்கு தலா ரூ. 1 லட்சம் குடும்ப நல நிதி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தலைவா் சி.அபூ , நிா்வாகக் குழு உறுப்பினா்கள் மற்றும் அங்கத்தினா்கள் கலந்துகொண்டனா்.