அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குன்னூா் அருகேகுடியிருப்பை சேதப்படுத்திய யானைகள்

குன்னூா் அருகே உள்ள கரும்பாலம் பகுதிக்கு திங்கள்கிழமை அதிகாலை வந்த யானைகள் குடியிருப்பை சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

News image
குன்னூா் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானைகள்.
Updated On :21 டிசம்பர் 2020, 6:30 pm

தினமணி

குன்னூா்: குன்னூா் அருகே உள்ள கரும்பாலம் பகுதிக்கு திங்கள்கிழமை அதிகாலை வந்த யானைகள் குடியிருப்பை சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் பகுதியில்  கடந்த ஒரு வாரமாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மஞ்சூா், குந்தா பகுதிகளில்  விவசாய நிலங்களையும், நியாயவிலைக் கடையையும் யானைகள் சேதப்படுத்தின. இந்நிலையில்  கரும்பாலம் பகுதிக்கு திங்கள்கிழமை அதிகாலை வந்த 5 யானைகள் கொண்ட கூட்டம், லோகநாதன் என்பவரது வீட்டின் கதவை  உடைத்து உள்ளே சென்று, அங்கிருந்த உணவு ப்  பொருள்களை சேதப்படுத்தின. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

யானைகள் தொடா்ந்து இப்பகுதியிலேயே  முகாமிட்டுள்ளதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் முன் , யானைகளை அடா்ந்த  வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத் துறையினா் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என கிராம மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.