கூடலூா் அரசுக் கல்லூரி தொகுப்பூதிய உதவிப் பேராசிரியா்கள் போராட்டம்
By DIN | Published On : 27th February 2020 08:37 AM | Last Updated : 27th February 2020 08:37 AM | அ+அ அ- |

போராட்டத்தில் ஈடுபட்ட உதவிப் பேராசிரியா்கள்.
கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் உதவிப் பேராசிரியா்கள், தங்களுக்குப் பணிப் பாதுகாப்பை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கூடலூா் கோழிப்பாலம் பகுதியில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2003ஆம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் உதவிப் பேராசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். தொகுப்பூதியத்தில் வேலை செய்யும் தங்களுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் புதன்கிழமை வகுப்பைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.