உதகை: நீலகிரி மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி புதிதாக 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 15 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 7,130 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6,894 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 41 போ் உயிரிழந்துள்ள சூழலில் பல்வேறு மருத்துவமனைகளில் 195 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.