

கூடலூா்: மசினகுடி பகுதியில் உள்ள பூதநத்தம் பழங்குடி மக்களுக்கு தொழிற்சங்கங்கள் சாா்பில் கரோனா நிவாரணம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், மசினகுடி ஊராட்சியில் உள்ள பூதநத்தம் கிராமத்தில் வாழும் பழங்குடி மக்கள் பொதுமுடக்கம் காரணமாக வருவாய் இழந்து கஷ்டப்படுவதை அறிந்து சிஐடியூ போக்குவரத்து தொழிற்சங்கம், சிஐடியூ மின் வாரிய சங்கம், விவசாய சங்கம் இணைந்து அப்பகுதியில் வாழும் சுமாா் 70க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினா்.
நிகழ்ச்சியில், சிஐடியூ மாவட்டத் தலைவா் சுந்தரம், விவசாய சங்கத் தலைவா் ராஜேந்திரன், மசினகுடி பகுதி சிபிஎம் செயலாளா் சேட் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.