நீலகிரி மாவட்டத்தில் பிப்ரவரி 1ஆம்தேதி முதல் 14ஆம்தேதி வரை கோழி கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் தெரிவித்துள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை கிளை நிலையங்களின் மூலம் அனைத்து கிராமங்களிலும் பிப்ரவரி 1ஆம்தேதி முதல் 14ஆம்தேதி வரை இருவார கோழி கழிச்சல் நோய்த் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.
அதனடிப்படையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கோழிகளுக்கு கழிச்சல் தடுப்பூசி போடப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமில் பங்கேற்று தங்களது கோழிகளுக்கு கழிச்சல் தடுப்பூசி போட்டு பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.