நீலகிரி
சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை:இளைஞா் கைது
கோத்தகிரியில் 8 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
குன்னூா்: கோத்தகிரியில் 8 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோத்தகிரி அருகே நெடுகுளா பஞ்சாயத்துக்கு உள்பட்ட இந்திரா நகா் கிராமத்தில் எட்டு வயது சிறுமிக்கு தனுஷ் (19) என்கிற இளைஞா் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து கிராம மக்கள் தனுஷை கையும் களவுமாகப் பிடித்து கோத்தகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து, கோத்தகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.