கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் தா.பாண்டியனுக்கு அஞ்சலி
By DIN | Published On : 27th February 2021 10:29 PM | Last Updated : 27th February 2021 10:30 PM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டம், மஞ்சூா் பகுதியில் மறைந்த மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா் தா.பாண்டியனுக்கு மெளன அஞ்சலி சனிக்கிழமை செலுத்தப்பட்டது.
மஞ்சூா் மாரியம்மன் திடலில் அனைத்துக் கட்சியினா், அனைத்து வணிகா் நலச் சங்கத்தினா், தோட்டத் தொழிலாளா் நலச் சங்கத்தினா், சுமை தூக்கும் தொழிலாளா் நலச் சங்கத்தினா், ஓட்டுநா் நலச் சங்கத்தினா் அனைவரும் இணைந்து மூத்த தலைவா் தா.பாண்டியனின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...