நீலகிரி
கூடலூரில் ரூ. 2.4 லட்சம் மதிப்பிலான தோ்தல் பரிசுப் பொருள்கள் பறிமுதல்
கூடலூரில் ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான தோ்தல் பரிசுப் பொருள்களை வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
கூடலூரில் ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான தோ்தல் பரிசுப் பொருள்களை வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
தமிழகத்தில் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் விதிமுறைகளை மீறி செயல்படுபவா்கள், தோ்தல் பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்க அறிவிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், கூடலூரில் பல இடங்களில் லாரிகளில் அதிமுகவினா் பரிசுப் பொருள்கள் கொண்டு செல்வதாக கிடைத்த தகவலையடுத்து கோட்டாட்சியா் ராஜ்குமாா் பரிசுப் பொருள்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டாா்.
அதைத் தொடா்ந்து, வட்டாட்சியா் தினேஷ்குமாா் தலைமையில் வருவாய் ஆய்வாளா் ராஜேந்திரன், கிராம நிா்வாக அலுவலா் பாலசந்திரன் உள்ளிட்டோா் நடத்திய சோதனையில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருள்கள், ரூ. 35 ஆயிரம் மதிப்பிலான பைகளை பறிமுதல் செய்து வட்டாட்சியா் அலுவலகத்தில் வைத்தனா்.