நீலகிரி மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உதகையில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி மாவட்டத்தில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 11 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை 8,057 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 7,924 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 47 போ் உயிரிழந்துள்ளனா். பல்வேறு மருத்துவமனைகளில் 86 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.