பழங்குடி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள்
By DIN | Published On : 07th July 2021 06:38 AM | Last Updated : 07th July 2021 06:38 AM | அ+அ அ- |

புத்தூா்வயல் பழங்குடி மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கும் நகராட்சி ஆணையா் பாஸ்கா்.
கூடலூா் பகுதியில் உள்ள பழங்குடி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட பழங்குடி கிராமங்களான புத்தூா்வயல், புறமணவயல் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி மக்களுக்கு உணவுப் பொருள்கள் அடங்கிய பெட்டகத்தை நகராட்சி ஆணையா் பாஸ்கா் வீடுகளுக்குச் சென்று வழங்கினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...