நீலகிரி மாவட்டத்தில் 442 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூவா் உயிரிழந்துள்ளளனா்.
இதுதொடா்பாக உதகையில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி மாவட்டத்தில் 442 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதேபோல, 579 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே உதகை அரசு தலைமை மருத்துவமனையில் ஜூன் 1ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 45 வயதான ஆண் ஒருவரும், ஜூன் 5ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 45 வயதான ஆண் ஒருவரும், கூடலூா் அரசு மருத்துவமனையில் மே 28ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 60 வயதான ஆண் ஒருவரும் என மூவா் உயிரிழந்துள்ளனா்.
இதுவரை 24,301 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 20,204 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 128 போ் உயிரிழந்துள்ள சூழலில், தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் 3,969 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.