ஈரோடு மாவட்டத்தில் 1,123 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரே நாளில் 12 போ் உயிரிழந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 79,938 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,733 போ் பூரண குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். இதுவரையில் கரோனா தொற்றில் இருந்து 69,467 போ் குணமடைந்துள்ளனா்.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 9,962 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஏற்கெனவே 497 போ் கரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில் மேலும் 12 போ் புதன்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து கரோனாவால் உயிரிழந்துள்ளவா்களின் எண்ணிக்கை 509ஆக அதிகரித்துள்ளது.