நீலகிரியில் மேலும் 175 பேருக்கு கரோனா: மூவா் பலி
By DIN | Published On : 20th June 2021 10:10 PM | Last Updated : 20th June 2021 10:10 PM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 175 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மூவா் உயிரிழந்துள்ளனா்.
இதுதொடா்பாக சுகாதாரத் துறை உதகையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் புதிதாக மேலும் 175 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 415 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியுள்ளனா்.
உதகை அரசு தலைமை மருத்துவமனையில் ஜூன் 6 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 70 வயது மூதாட்டி, ஜூன் 14 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 70 வயதான முதியவா், ஜூன் 16 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 63 வயதான மூதாட்டி என மூவா் உயிரிழந்துள்ளனா். இதனால் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது.
இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரையிலும் கரோனா தொற்றால் 27,158 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 25,098 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், பல்வேறு மருத்துவமனைகளிலும் 1,914 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.