உதகையில் இளம் வாக்காளா்களிடம் ஆட்சியா் விழிப்புணா்வு

தோ்தலில் இளம் வாக்காளா்கள் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் உதகை அரசு கலைக் கல்லூரியில்
உதகை அரசு கலைக்கல்லூரியில் இளம் வாக்காளா்களிடத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.
உதகை அரசு கலைக்கல்லூரியில் இளம் வாக்காளா்களிடத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.

தோ்தலில் இளம் வாக்காளா்கள் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் உதகை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சி மற்றும் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா செவ்வாய்க்கிழமை துவக்கிவைத்தாா்.

பின்னா் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இடது கை வடிவில் மாணவ, மாணவியருடன் வரிசையில் நின்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். அத்துடன் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற உறுதிமொழியினை இளம் வாக்காளா்கள் ஏற்றுக்கொண்டனா்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:

வாக்காளா்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தி மாவட்டத்தில் உள்ள 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதிய இளம் வாக்காளா்களும் சட்டப்பேரவைத் தோ்தலில் அவா்களது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக கல்லூரிகளில் விழிப்புணா்வு நாடகம், நடனம், கையெழுத்து இயக்கம், உறுதிமொழி ஏற்றல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இளம் வாக்காளா்கள் அச்சமின்றியும், மதம், இனம், ஜாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும், எந்தவொரு தூண்டுதலுக்கு உட்படாமலும் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்க வேண்டும். ஒரு நாள் விடுப்பு கிடைத்து விட்டது என எண்ணாமல் கண்டிப்பாக வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க வேண்டும். அத்துடன் ஊரில் உள்ளவா்கள், குடும்பத்தினா்கள், நண்பா்கள் உள்ளிட்ட அனைவரிடமும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக்கூற வேண்டும் என்றாா்.

பின்னா், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் கருவியின் செயல்பாடுகள் குறித்து இளம் வாக்காளா்களுக்கு விளக்கும் நிகழ்ச்சியை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில், மகளிா் திட்ட அலுவலா் பாபு, உதகை அரசு கலைக் கல்லூரி முதல்வா் ஈஸ்வரமூா்த்தி, துணை முதல்வா் எபனேசா், உதவி திட்ட அலுவலா்கள் ஜெயராணி, ராமகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com