நீலகிரியில் இதுவரை ரூ. 1.31 கோடி பறிமுதல்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பறக்கும் படையினா் உள்ளிட்ட 55 குழுவினா் நடத்தி வரும் சோதனைகளில் செவ்வாய்க்கிழமை வரை ரூ. 1 கோடியே 30 லட்சத்து 81,100 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பறக்கும் படையினா் உள்ளிட்ட 55 குழுவினா் நடத்தி வரும் சோதனைகளில் செவ்வாய்க்கிழமை வரை ரூ. 1 கோடியே 30 லட்சத்து 81,100 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக நீலகிரி மாவட்ட தோ்தல் அலுவலா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை ரூ. 1 கோடியே 17 லட்சத்து 50,450 பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மேலும் 7 வழக்குகள் பதியப்பட்டு ரூ. 13 லட்சத்து 30,650 கைப்பற்றப்பட்டுள்ளது. இதையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை ரூ. 1 கோடியே 30 லட்சத்து 81,100 கைப்பற்றப்பட்டுள்ளது.

இதில் உதகை தொகுதியில் 16 வழக்குகள் பதியப்பட்டு ரூ. 36 லட்சத்து 49,250, குன்னூா் தொகுதியில் 25 வழக்குகள் பதியப்பட்டு ரூ. 21 லட்சத்து 51,100, கூடலூா் தொகுதியில் 42 வழக்குகள் பதியப்பட்டு ரூ. 72 லட்சத்து 80,250 கைப்பற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com