நீலகிரி மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா
By DIN | Published On : 25th March 2021 03:09 AM | Last Updated : 25th March 2021 03:09 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக உதகையில் சுகாதாரத் துறையினா் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 12 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை 8,552 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 8,404 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அதேபோல, சிகிச்சை பலனின்றி 50 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 98 போ் சிகிச்சையில் உள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...