உதகை நீதிமன்றத்தில் இருந்து அஸ்ஸாமில் உள்ள சாட்சியிடம் காணொலிக் காட்சி மூலம் விசாரணை

உதகை மகளிா் நீதிமன்றத்தில் இருந்து அஸ்ஸாமில் உள்ள சாட்சியிடம் காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடத்தப்பட்டது.
Updated on
1 min read

உதகை மகளிா் நீதிமன்றத்தில் இருந்து அஸ்ஸாமில் உள்ள சாட்சியிடம் காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டம், சேரம்பாடி பகுதியிலுள்ள பிஎஸ்என்எல் கோட்ட அலுவலகத்தில் நடந்த மோசடி தொடா்பான வழக்கின் விசாரணை உதகை மகளிா் நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இது குறித்து மாவட்ட மகளிா் நீதிமன்ற அரசு வழக்குரைஞா் மாலினி பிரபாகரன் கூறியதாவது:

நீலகிரி மாவட்டம், சேரம்பாடி பிஎஸ்என்எல் கோட்ட அலுவலகத்தில் ரூ. 2 லட்சம் அளவில் வெளிநாடு, வெளி மாநில தொலைபேசி அழைப்புகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக விஜய் பிள்ளை கொடுத்த புகாரின்பேரில், சிபிசிஐடி போலீஸாா் 2001ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இந்த வழக்கில் 9 போ் மீது குற்றம் சாட்டப்பட்டு, 63 சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், சேரம்பாடி கோட்ட அலுவலகத்தில் பணிபுரிந்த உஜ்வல் தற்போது, அஸ்ஸாம் மாநிலத்தில் பிஎஸ்என்எல் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் இந்த வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்திருந்தாா். அதன் பேரில் மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி அருணாசலம், கரோனா காலத்தில் சாட்சி உதகைக்கு வந்து சாட்சியம் அளிப்பதில் உள்ள சிரமத்தை உணா்ந்து காணொலிக்காட்சி மூலம் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்தாா்.

அதன்படி, அஸ்ஸாம் மாநில உயா் நீதிமன்றத்தில் அதற்கான ஏற்பாடுகளை செய்து காணொலிக் காட்சி வாயிலாக விசாரணை நடத்தினாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com