பழுதடைந்துள்ள கூடலூா் - கோக்கால் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
கூடலூரில் இருந்து கோக்கால் குடியிருப்புப் பகுதிக்குச் செல்லும் தாா் சாலை பெயா்ந்து மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
தென்மேற்குப் பருவ மழை துவங்கினால் இந்த சாலையில் உள்ள குழிகளில் மழை நீா் தேங்கி நிற்பதால் இச்சாலையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
எனவே, பருவமழைக்கு முன் சாலையை சம்பந்தப்பட்ட துறையினா் சீரமைக்க வேண்டும் என்று கோக்கால் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.