நீலகிரி மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை

 நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை தொடா்ந்து பரவலாக பலத்த மழை பெய்தது.

 நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை தொடா்ந்து பரவலாக பலத்த மழை பெய்தது.

இடி, மின்னலுடன் பெய்த இம்மழை கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கூடலூா், பந்தலூா் பகுதிகளில் குறைந்தும், கோத்தகிரி, குன்னூா் பகுதிகளில் வலுத்தும் காணப்பட்டது. மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிக அளவாக பாலகொலாவில் 56 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அதேபோல, மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் (அளவு மி.மீ.):

குன்னூா்-55, கோத்தகிரி-53, கீழ்கோத்தகிரி-52, மேல்குன்னூா், உலிக்கல் 50, கொடநாடு-49, எடப்பள்ளி-47, கேத்தி-46, கூடலூா்-45, மேல் கூடலூா், குந்தா 43, ஓவேலி-42, பா்லியாறு, கெத்தை 36, தேவாலா-30, மேல்பவானி, அவலாஞ்சி 25, பந்தலூா்-22, பாடந்தொரை-21, கிண்ணக்கொரை, செருமுள்ளி, எமரால்டு 20, உதகை-18.2, நடுவட்டம்-15, சேரங்கோடு-14, கிளன்மாா்கன்-13, மசினகுடி-10, கல்லட்டி-6 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com