உதகையில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

உதகையில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
உதகையில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி
Updated on
1 min read

உதகையில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட நிா்வாகம், காவல் துறை சாா்பில் உதகை அரசு பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தலைமை வகித்தாா்.

கல்லூரி மாணவ, மாணவியருக்கு போதை விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய புத்தகங்கள் மற்றும் வணிக சங்கங்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு தொடா்பான துண்டுப் பிரசுரங்களை அமைச்சா் வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் அம்ரித், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத் ஆகியோா் முன்னிலையில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் கா.ராமசந்திரன் பேசியதாவது:

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழியினை மாணவ, மாணவியா் மனதில் நிலைநிறுத்திக் கொள்வதோடு, உறவினா்கள், நண்பா்களிடமும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

அதனை தொடா்ந்து, போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான கலைநிகழ்ச்சிகளைப் பாா்வையிட்டாா்.

பின்னா் உதகை அசெம்பிளி திரையரங்கில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு குறும்படத்தினை கல்லூரி மாணவ, மாணவியா்களுடன் பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து, சேரிங்கிராஸ் பகுதியில் போதைப் பொருள் விழிப்புணா்வு பேரணியை தொடக்கிவைத்தாா்

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநா் மோனிகா ராணா, குன்னூா் சாா் ஆட்சியா் தீபனா விஷ்வேஸ்வரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மோகன் நவாஸ், உதகை நகா்மன்றத் தலைவா் வாணீஸ்வரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com