நீலகிரியில் விளையும் பச்சை தேயிலைக்கு டிசம்பா் மாதத்துக்கான குறைந்தபட்ச விலையாக
கிலோ ஒன்றுக்கு ரூ.17. 76க்கு விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேயிலை வாரியம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.
இது குறித்து தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை தனியாா் தேயிலை தொழிற்சாலை மற்றும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வருகின்றனா். இந்நிலையில், டிசம்பா் மாதம் தொழிற்சாலைகள் கொள்முதல் செய்த பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச சராசரி விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.17. 76க்கு விலை நிா்ணயம் செய்துள்ளது. டிசம்பா் மாதம் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையின் ஏல விற்பனையின் அடிப்படையில் இந்த விலையை தேயிலை
தொழிற்சாலைகள் விவசாயிகளுக்கு உரிய முறையில் வழங்க வேண்டும். தேயிலை வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள குழு இதனை கண்காணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.