கூடலூா் சிவன் மலையில் காா்த்திகை மகா தீபம் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்றப்பட்டது.
கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டையில் உள்ள சிவன் மலையில் காா்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கிரிவலம் சென்று மலை உச்சியில் அமைந்துள்ள சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனா். அதைத் தொடா்ந்து மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் அமைக்கப்பட்டுள்ள கொப்பறையில் சிவன்மலை வளா்ச்சி மற்றும் சமூக நல அறக்கட்டளையின் தலைவா் கேசவன் தீபத்தை ஏற்றிவைத்தாா். இதையடுத்து சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.