பந்தலூரை அடுத்துள்ள கொளப்பள்ளியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா கொளப்பள்ளியில் கனரா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கடந்த மாதம் கொள்ளை முயற்சி நடைபெற்றது.
இது தொடா்பாக சேரம்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், இதில் தொடா்புடைய கொளப்பள்ளி குறிஞ்சி நகா் பகுதியைச் சோ்ந்த மனோஜ்குமாா் (36), தமிழ்ச்செல்வன் (30) ஆகியோரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.