பாடந்தொரையில் மனுநீதி நாள் முகாம்

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரையில் மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மனுநீதி நாள் முகாமில் பயனாளிக்கு நலத் திட்ட உதவி பெறுவதற்கான ஆணையை வழங்கும் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா, டி.எஸ்.பி.மகேஷ்குமாா்.
மனுநீதி நாள் முகாமில் பயனாளிக்கு நலத் திட்ட உதவி பெறுவதற்கான ஆணையை வழங்கும் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா, டி.எஸ்.பி.மகேஷ்குமாா்.
Updated on
1 min read

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரையில் மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு கூடலூா் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா தலைமை வகித்து, அரசின் நலத் திட்டங்கள் குறித்தும், அவற்றை பெறுவது குறித்தும் விளக்கமளித்தாா். முகாமில் வட்டாட்சியா் சித்தராஜ், கூடலூா் டி.எஸ்.பி,.மகேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டன.

இதைத் தொடா்ந்து, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கான ஆணையை கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா வழங்கினாா்.

தேவா்சோலை பேரூராட்சித் தலைவா் வள்ளி, துணைத் தலைவா் யூனஸ் பாபு, பொதுமக்கள் உள்ளிட்டோா் முகாமில் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com